திருத்துறைப்பூண்டி, ஜூன் 4: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறைக்குப்பிறகு 2019 - 2020ம் கல்வியாண்டில் பள்ளித் துவக்கநிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் பாலு தலைமையில் நடைபெற்றது. முதுகலைஆசிரியர் முகுந்தன் வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார்.மாணவ மாணவியருக்கு இனிப்பு வழங்கி பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் அப்துலமுனாப் பேசினார். நிகழ்ச்சியில் அனைத்து மாணவமாணவிகளுக்கும் விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட்டன.6, 9 மற்றும் 11ம் வகுப்பில் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவமாணவிகளுக்கு இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர்கள்மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர் முடிவில் பட்டதாரிஆசிரியர் ரகு நன்றி கூறினார்.